Connect with us

இலங்கை

அர்ச்சுனா எம்பியிடம் 100 மில்லியன் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல்

Published

on

Loading

அர்ச்சுனா எம்பியிடம் 100 மில்லியன் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  கூறப்படுகின்றது.

Advertisement

இந்த வழக்கு இன்று (18) யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

நாடாளும்ன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சமூகவலைத்தளங்கள் ஊடாகவும், பிற வழிகளிலும் வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்பில் பொய்யான தகவல்களை அர்ச்சுனா பரப்பி வருகிறார் எனவும் அண்மையில் வைத்தியசாலைக்குள் நுழைந்து ரௌடித்தனத்தில் ஈடுபட முயன்றபோதும், அது தன்னால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது எனவும் சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் தன்மீது மோசமான பொய்ப்பிரச்சாரங்களில் அர்ச்சுனா ஈடுபட்டிருந்தார் எனவும் தெரிவித்து சட்டத்தரணி கு.குருபரன் ஊடாக இந்த மானநஸ்ட வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன