இலங்கை
டெல்லியில் கடும் காற்று மாசு; பொதுமக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!

டெல்லியில் கடும் காற்று மாசு; பொதுமக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!
டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். டெல்லியில் பல இடங்களில் காற்றின் தரக்குறியீட்டு எண் 400 புள்ளிகளுக்கு மேல் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக துவாரகாவில் காற்றின் தரக்குறியீட்டு எண் 460-ஐ தாண்டியுள்ளதாகவும் கொவிட்-19 தொற்றை விடவும் இது சுகாதார ரீதியாக பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனம் நிர்ணயித்துள்ள பாதுகாப்பு எல்லையை விடவும் டெல்லியில் காற்றின் தரம் 35 மடங்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காற்று மாசுபாடு காரணமாக மக்களுக்கு மூச்சுத் திணறல், கண்கள் மற்றும் தொண்டையில் அரிப்பு போன்ற பாதிப்புக்கள் ஏற்படுவதாக தெரிவித்த மருத்துவர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களை முடியுமானளவு வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. (ச)