இலங்கை
வவுனியா வைத்தியசாலையில் ஈவிரக்கமற்ற செயல்

வவுனியா வைத்தியசாலையில் ஈவிரக்கமற்ற செயல்
வவுனியா வைத்தியசாலையில், ஈவிரக்கமின்றி நாய் ஒன்று வாயு துப்பாக்கியால் சுட்டுப் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் நேற்று (19) வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே நயை சுட்டுக் கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நாய் காப்பகம் ஒன்றை நடத்தி வருபவர் வைத்தியசாலை பணிப்பாளரிடம் இன்று (20) முறைப்பாடு செய்துள்ளார்.
இது குறித்த விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்ப்படும் என பணிப்பாளர், முறைப்பாடு செய்தவரிடம் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகின்றது.