இலங்கை
இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள விசேட அறிக்கை!

இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள விசேட அறிக்கை!
சட்டவிரோத நிதி திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த திட்டங்கள் தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நிறுவனங்களில், சில நிறுவனங்கள் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
ஏனைய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நோக்கில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (ப)