Connect with us

இந்தியா

Jafar Sadiq | ஜாபர் சாதிக் ஜாமின் மனு விசாரணை – வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அறிவிப்பு!

Published

on

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் மனு

Loading

Jafar Sadiq | ஜாபர் சாதிக் ஜாமின் மனு விசாரணை – வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அறிவிப்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் மனு

Advertisement

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளரும் திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

அதன்படி கடந்த ஜூன் 26ம் தேதி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைதானார்.

Advertisement

இவர்கள் தாக்கல் செய்த பிணை மனுவவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை கோரி இவர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆஜரான அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், இருவரது பிணை மனுக்கள் மீதும் கடந்த 19ம் தேதி மாலை 6 மணியளவில் தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கு முன்பாகவே சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை கோரி மனுதாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Advertisement

விசாரணை நிறைவடையும் முன்பே எப்படி மனுத்தாக்கல் செய்யப்பட்டது எனகேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன