Connect with us

இலங்கை

களுத்துறையில் 2 பிள்ளைகளின் தந்தை கொலை!

Published

on

Loading

களுத்துறையில் 2 பிள்ளைகளின் தந்தை கொலை!

களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பயாகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

களுத்துறை கட்டுகுருந்த சனச மாவத்தையில் வசிக்கும் பத்தரமுல்ல கிராமத்தைச் சேர்ந்த அமித் பிரியதர்ஷன என்ற 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

வீடு ஒன்றில் மர்மமான முறையில் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணை நடத்தியதில், வீட்டின் அறையில் தலைகீழாக சடலம் கிடந்தது.

பாதிக்கப்பட்டவரின் மார்பு மற்றும் வயிற்றில் ஆழமான காயங்கள் காணப்பட்டதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த கொலை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை பிரிவு குற்றத்தடுப்புப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் நீதிவான் ஆகியோர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பயாகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  (ப)
 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன