Connect with us

இலங்கை

இலங்கையில் புகைப்பட மோகத்தால் ஏற்பட்ட அசம்பாவிதம்… தாய், இளம் பெண் உயிரிழப்பு!

Published

on

Loading

இலங்கையில் புகைப்பட மோகத்தால் ஏற்பட்ட அசம்பாவிதம்… தாய், இளம் பெண் உயிரிழப்பு!

அனுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் புகைப்படம் எடுக்க முயற்சித்த இரு பெண்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்கான இரத்தினபுரியில் இருந்து வருகைதந்த இருவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

குறித்த சம்பவத்தில் இரத்தினபுரியை சேர்ந்த 37 வயதுடைய தாயும், 18 வயதுடைய மகளுமே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசந்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிவேக ரயில் மோதிய நிலையில் குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன