Connect with us

உலகம்

நெதன்யாகுவுக்கு பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம்!

Published

on

Loading

நெதன்யாகுவுக்கு பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், நேற்று (21), பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

2023ஆம் ஆண்டு, ஒக்டோபர் 7ஆம் திகதியன்று, இஸ்ரேல் ஹமாஸ் கிளிர்ச்சியாளர்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலியர் 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அத்துடன், இஸ்ரேலியர்கள் உள்பட சிலர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். பிணைக் கைதிகளில் சொற்பமானவர்களே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், காசா மீது இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. காசா மீதான தாக்குதல், ஹமாஸ் ஆதரவு அமைப்புகள் மீது நீண்டுள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லாக்கள், சிரியாவில் ஈரான் ஆதரவு கிளர்சிப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காசாவில் மட்டும் பெண்கள், குழந்தைகள் உள்பட 44,000 பேர் உயிரிழந்துள்ளனர். லெபனான் உயிர்ழப்புகள் 3,500ஐ கடந்துள்ளது.

Advertisement

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நேற்று (21) பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இஸ்ரேல் மீது போர்க்குற்ற புகார்கள் முன்வைக்கப்பட்டு சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில்தான், இப்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட்டுக்கு எதிராகவும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. போர்க் குற்றச்சாட்டுகள் நிமித்தமாக, குறிப்பாக உயிரிழப்புகள் தொடர்பாக இஸ்ரேல் அளித்த விளக்கங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன