Connect with us

விளையாட்டு

Exclusive : மனைவியுடன் முதல் Chess போட்டி- 14th Move-ல் டிரா – விஸ்வநாதன் ஆனந்த் சுவாரஸ்யம்

Published

on

Exclusive : மனைவியுடன் முதல் Chess போட்டி- 14th Move-ல் டிரா - விஸ்வநாதன் ஆனந்த் சுவாரஸ்யம்

Loading

Exclusive : மனைவியுடன் முதல் Chess போட்டி- 14th Move-ல் டிரா – விஸ்வநாதன் ஆனந்த் சுவாரஸ்யம்

பல்வேறு துறைகளில் சாதனைபடைத்த தமிழ்நாட்டு ஆளுமைகளுடன் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், ‘டிஸ்கோ வித் கே.எஸ்’ எனும் உரையாடும் நிகழ்ச்சியை நடத்திவருகிறார். அந்த வகையில் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்ததுடன் உரையாடல் நிகழ்த்தினார்.

Advertisement

“அந்தச் சமயத்தில் தற்போது இருப்பது போல் தொழில்நுட்பம் பெரிதாக வளர்ச்சி அடையாத காலம். அப்போது தவறுகளை செய்து தான் கற்றுக்கொள்ள முடியும். ஐந்து வருடம் செய்ய வேண்டிய அனைத்து தவறுகளையும் செய்து 2000ம் ஆண்டு முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப்பை வென்றேன். 2007ல் மீண்டும் வென்றேன்”

2

Advertisement

“டிசம்பர் 11 என் பிறந்தநாள். 2000ம் ஆண்டு அதே நாளில் விளையாட்டு எனக்கு சாதகமாக சென்றுக்கொண்டிருந்த போட்டி திடீரென கைவிட்டு விலகியது. கிட்டத்தட்ட ஆட்டத்தைவிட்டு விலக வேண்டிய சூழல், அப்போது அவர் செய்த ஒரு சிறிய தவறு மீண்டும் போட்டியை என் பக்கம் கொண்டுவர முடிந்தது. கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிறகு 8 மாதங்கள் என் விளையாட்டு கொஞ்சம் தோய்வைச் சந்தித்தன. அப்போது தான் எனக்கு ஒன்று புரிந்தது. எப்போதும் பெரியதாக ஒன்றை முடிக்க நினைத்து முடித்துவிட்டால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்துக்கொள்ள வேண்டும். பெரியதாக இல்லை என்றாலும்கூட சிறிய சிறிய விஷயங்களை வெல்லவேண்டும் என வைத்துக்கொள்ள வேண்டும்”

“ரஷ்யா, அப்போது சோவியத் யூனியன், முதலில் இருந்தே செஸ் அங்கு இருக்கிறது. இருந்தாலும், கம்யூனிசம் அங்கு வந்த பிறகு முதலித்துவத்தில் இருப்பதுபோல் எப்போதும் வேலை என்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை காட்டுவதற்காக, விளையாட்டு, அறிவியல், கலாச்சாரம், கலை என அனைத்திலும் நேரத்தை செலவழிக்க ஊக்குவித்தனர். அப்போது அதிகமாக விளையாட ஆரம்பிக்கும்போது செஸ் பெரிதாக வளர்கிறது.”

Advertisement

“கொஞ்சம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், செஸ் வீரர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள். காரணம் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்து அதில் இருந்து கற்றுக்கொள்வார்கள். அதேபோல் நிறைய இடத்தில், பள்ளியில் ஒரு வாரத்தில், மூன்று மணி நேரம் செஸ் விளையாடும் குழந்தைகளின் படிப்பு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மேம்படுகிறது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. காரணம் இது ஒரு வகையான மன பயிற்சி.”

Advertisement

“ஆம், திருமணத்திற்கு முன்பு அவருக்கு செஸ் விளையாட தெரியாது. பிறகு தான் கற்றுக்கொண்டார். அப்படி திருமணம் முடிந்து ஒரு வருடம் கழித்து நானும் என் மனைவியும் செஸ் விளையாடினோம். அந்த போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி, 14 மூவ்களை மேற்கொண்டு டிரா ஆனது.”

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன