Connect with us

இலங்கை

தேர்தல் திருத்த சட்டவரைவு 7ஆம் திகதி நாடாளுமன்றில்!

Published

on

Loading

தேர்தல் திருத்த சட்டவரைவு 7ஆம் திகதி நாடாளுமன்றில்!

உள்ளாட்சிச் சபைத் தேர்தல் திருத்தச்சட்டவரைவு எதிர்வரும் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.
2025 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜனவரி 7ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஜனவரி 10 ஆம் திகதிவரை சபை அமர்வுகள் இடம்பெறும்.

ஜனவரி 7 ஆம் திகதி துறைசார் அமைச்சரால் இந்தச் சட்டவரைவு முன்வைக்கப்படவுள்ளது என்றும், அதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலும் 10 ஆம் திகதிக்குள் அது சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரியவருகின்றது.

Advertisement

உள்ளாட்சிசபைத் தேர்தலுக்காக ஏற்கனவே கோரப்பட்டிருந்த வேட்பு மனுக்களை நிராகரித்தது, புதிதாக வேட்பு மனுக்களை கோரும் வகையிலேயே சட்டத் திருத்தம் வரவுள்ளது. உள்ளாட்சிச் சபைத் தேர்தல் மார்ச் இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. (ச)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன