Connect with us

இலங்கை

யாழில் உயிரிழந்த இராணுவ வீரர்!

Published

on

Loading

யாழில் உயிரிழந்த இராணுவ வீரர்!

யாழ்ப்பாணம் – பலாலி இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவ சர்ஜன்ட் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

சம்பவத்தில் குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த 31 வயதுடைய றதித்த ரங்கன திசாநாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இராணுவ வீரருக்கு நேற்றுமுன்தினம்  காலை நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் 

இதன்போது, பலாலி இராணுவ வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

Advertisement

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இதன்போது, மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன