Connect with us

இலங்கை

வடக்கு ஆளுநர்- யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சந்திப்பு!

Published

on

Loading

வடக்கு ஆளுநர்- யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சந்திப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனை, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் யகம்பத் ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டதுடன் ஆளுநர் , யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் யகம்பத்தும் யாழ். மாவட்டத்தில் பணிபுரிந்தமையை நினைவுகூர்ந்திருந்தார்.

Advertisement

மேலும், யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய விடயங்கள் தொடர்பில் விரைவில் சந்தித்துக் கலந்துரையாடுவோம் என்றும் கட்டளைத்தளபதி ஆளுநரிடம் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. (ச)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன