இலங்கை
திடீரென வீதிக்கிறங்கிய மக்கள்
திடீரென வீதிக்கிறங்கிய மக்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று காலை கிளிநொச்சியில் டிப்போ சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.
மதுபோதைக்கு எதிரான இயக்கம் மற்றும் வடக்கு-கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் சர்வ மதத்தலைவர்கள், அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது, கிளிநொச்சி மாவட்ட பதில் மாவட்ட செயலர் எஸ். முரளீதரனிடம் ஜனாதிபதிக்கு கையளிக்குமாறு மனு ஒன்று கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.