Connect with us

இலங்கை

இரண்டு சிறுத்தைக் குட்டிகள் மீட்பு

Published

on

Loading

இரண்டு சிறுத்தைக் குட்டிகள் மீட்பு

ஹட்டன் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென்ஜோன்டிலரி மேற்பிரிவு தோட்ட தேயிலை மலையில் இருந்து இரண்டு சிறுத்தைக் குட்டிகள் மீட்கப்பட்டதாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த தேயிலை மலையில் ஆண் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த போது இரண்டு குட்டிகள் இருப்பதை கண்டு தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளனர்.

Advertisement

இந்த இரண்டு குட்டிகள் தொடர்பாக நோர்வூட் பொலிஸார் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்ததை தொடர்ந்து இந்த இரண்டு குட்டிகளும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு குட்டிகளையும் தாய் சிறுத்தை திங்கட்கிழமை (23) ஈண்டெடுத்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிப்பதோடு மீட்ட இரண்டு சிறுத்தை குட்டிகளையும் அதே இடத்தில் வைக்குமாறு வனவிலங்கு அதிகாரிகள் குறித்த தேயிலை மலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அறிவித்ததாக தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இரண்டு குட்டிகளும் காணப்பட்ட பகுதியில் பெரிய சிறுத்தை ஒன்று அலைந்து திரிவதாகவும் அந்த பகுதிக்கு சென்று தொழில் புரிய முடியாத சூழ் நிலை காணப்படுவதாக தொழிலாளர்கள் சுட்டி காட்டுகின்றனர்.

Advertisement

எனவே, இது தொடர்பாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சென்ஜோன் டிலரி மேற்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன