இலங்கை
டெங்கு நோய் பரப்பும் நுளம்புகளை இனங்காணும் நடவடிக்கை!

டெங்கு நோய் பரப்பும் நுளம்புகளை இனங்காணும் நடவடிக்கை!
டெங்கு நோய் பரவும் சூழலை இனங்கண்டு டெங்கு நோய் பரப்பும் நுளம்புகளை இனங்காணும் நடவடிக்கை இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட தொற்று நோய் பிரிவினரின் ஏற்பாட்டில் பரந்தன் பகுதியில் மாவட்ட தொற்று நோய் பிரிவு மருத்துவர் க.ரஞ்சன் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், தொற்றுநோய் பிரிவின் சுகாதார உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.