Connect with us

இலங்கை

மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்துவோர் மீது பாயும் சட்டம்!

Published

on

Loading

மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்துவோர் மீது பாயும் சட்டம்!

வரும் காலங்களில் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் அனைத்து சந்திர்ப்பங்களிலும் கைது செய்யப்படும் சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களை 12 மாதங்களுக்கு இடைநிறுத்தி அல்லது இரத்து ​செய்யுமாறு நீதிமன்றில் பொலிஸாரால் கோரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம் என சாரதிகளை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

கடந்த 24 மணித்தியாலங்களில் அமுல்படுத்தப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே பொலிஸார் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இன்று (26) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 395 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த 24 மணி நேரத்தில், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் செலுத்திய 50 சாரதிகளும், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 120 சாரதிகளும், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 1,262 சாரதிகளும்,

Advertisement

அனுமதிப்பத்திர தவறுகள் தொடர்பில் 682 சாரதிகளும்,வேறு வகையான போக்குவரத்து தவறுகள் தொடர்பில் 5,441 சாரதிகளும் உள்ளடங்களாக 7,950 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில், பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை கடந்த 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் இந்த விசேட நடவடிக்கையை பொலிஸாரால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன