Connect with us

இலங்கை

போலி நாணயத்தாள்கள் வைத்திருந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Published

on

Loading

போலி நாணயத்தாள்கள் வைத்திருந்தவர்களுக்கு நேர்ந்த கதி

  ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் இரண்டினை வைத்திருந்த குற்றச்சாட்டி கைதான சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதிமன்ற நீதவான் நேற்று (26) உத்தரவிட்டுள்ளார்.

16 வயதுடைய பாடசாலை மாணவனும் 21 வயதுடைய இளைஞனுமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

சந்தேக நபர்கள் இருவரும் அநுராதபுரம் – தந்திரிமலை நகரில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் நேற்றைய தினம் (26) ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் இரண்டை மாற்ற முயன்றுள்ளனர்.

அந்த நாணயத்தாள்கள் தொடர்பில் சந்தேகமடைந்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தந்திரிமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன