இலங்கை
இலங்கைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவன் படைத்த உலக சாதனை!

இலங்கைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவன் படைத்த உலக சாதனை!
இலங்கையைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவன் ஒருவர் சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
கம்பஹா இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த சஸ்னுல செஹன்ச என்ற மாணவனே இந்த சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவன் 1200 ரூபிக்ஸ் க்யூப்ஸைப் பயன்படுத்தி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் படத்தை உருவாக்கி சோழன் உலக சாதனையை படைத்துள்ளார்.
சஸ்னுல செஹன்சவின் அடுத்த இலக்கு 120,000 ரூபிக்ஸ் க்யூப்ஸைப் பயன்படுத்தி கின்னஸ் உலக சாதனையைப் படைப்பதாகும் என தெரிவித்துள்ளார்.