இலங்கை
கருணா அன்று செய்தது சரி என்பதை இன்று நிருபித்துள்ள தமிழரசுக்கட்சி சுமந்திரன் மத்திய குழு!

கருணா அன்று செய்தது சரி என்பதை இன்று நிருபித்துள்ள தமிழரசுக்கட்சி சுமந்திரன் மத்திய குழு!
தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற குழு பேச்சாளாராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் இருந்தால் அவர் கட்சி பேச்சாளராகவும் செயல்படலாம்,
ஆனால் மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் நாடாளுமன்ற குழு பேச்சாளராக இருந்தால் அவர் தமிழரசுக் கட்சி பேச்சாளராக செயல்படகூடாது.
இதுதான் இன்றையதினம் (28-12-2024) வவுனியா மத்திய குழுவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சி. வி கே சிவஞானம், சுமந்திரன், சயந்தன், குலநாயகம் ஆகியோர் எடுத்த முடிவுகளாக கருதவேண்டியுள்ளது.
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீநேசன் நாடாளுமன்ற குழுவாக நியமித்தால் அவர் தமிழரசுக் கட்சி பேச்சாளராக செயல்படக்கூடாது என்பதே என யாழ்ப்பாணத்தை சேர்ந்த சி வி கே சிவஞானம் சுமந்திரன் சிந்தனையாக இருந்துள்ளது.
இது ஒருவேளை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் அவர் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சி பேச்சாளராகவே தொடர்ந்திருப்பார் இந்த பிரதேசவாதம் யாழ்ப்பாண மக்களிடம் இல்லை ஆனால் தமிழரசுக்கட்சிக்குள் உள்ளது.
கடந்த 2024, ஜனவரி 27, ம் திகதி திருகோணமலை பொதுச்சபை கூட்டத்திற்கு முன்பு இடம்பெற்ற பொதுச்செயலாளர் தெரிவிலும் ஶ்ரீநேசனை பொதுச்செயலாளர் பதவிக்கு அரியநேந்திரன் முன்மொழிந்த போதும் அந்த பதவியை தனக்கு தரவேண்டும் என சுமந்திரன் கேட்டு குழப்பியதற்கும் பிரதான காரணம் ஶ்ரீநேசன் மட்டக்களப்பான் என்ற ஒரே காரணம்தான் அதுதான் இன்றைய (28) மத்தியகுழுக் கூட்டமத்திலும் இடம்பெற்றுள்ளது.
மத்தியகுழுவில் உள்ள ஏனைய உறுப்பினர்களும் இந்த யாழப்பாண பிரதேச வாத அரசியலுக்கு துணை போய் உள்ளனர் எவருமே எதிர்க்கவில்லை.
இந்த சம்பவம் கடந்த 2004, ல் கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியதை மீண்டும் உறுதிப்படுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது.
உண்மையில் யாழ்ப்பாண தமிழ்மக்கள் இதற்கு உடந்தைகள் இல்லை தமிழரசுக் கட்சியில் உள்ளவர்களிடம் இப்போதும் பிரதேசவாதம் புறக்கணிப்புகள் தொடர்வதை இந்த சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது.