Connect with us

இந்தியா

கிச்சன் கீர்த்தனா: அரிசி வடை

Published

on

Loading

கிச்சன் கீர்த்தனா: அரிசி வடை

அரையாண்டு விடுமுறையில் வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு எதை செய்து கொடுத்து அசத்தலாம் என்று நினைக்கும் இல்லத்தரிசிகளுக்கு  சுவையான, எளிதாகச் செய்யக்கூடிய இந்த அரிசி வடை உதவும். காலை உணவுடன் சேர்த்துக் கொடுத்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள்.

பச்சரிசி – ஒரு கப்
உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
புளித்த தயிர் – ஒரு கப்
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 10 (நறுக்கவும்)
எண்ணெய் – 250 மில்லி
உப்பு – தேவையான அளவு

Advertisement

அரிசியுடன் உளுத்தம்பருப்பு, தயிர் சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அதனுடன் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக, நைஸாக அரைத்தெடுக்கவும். அதனுடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து மாவைச் சிறிய வடைகளாக வாழையிலையில் தட்டிப்போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சாம்பார் அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன