Connect with us

இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் யாழில் போரட்டம்!

Published

on

Loading

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் யாழில் போரட்டம்!

இலங்கையில் உள்நாட்டு போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் உறவுகளால் இன்றையதினம் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நீதி வேண்டி வட மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் ஒரு அங்கமாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராடமானது ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியூடாக சென்று யாழ் மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தது.

இதையடுத்து யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடிய வாழும் உறவுகள் தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலை குறித்து சர்வதேசமே  தீர்வை வழங்க வேண்டும் என்ற சுலோகங்களை கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். (ச)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன