இலங்கை
முதலாம் திகதியிலிருந்து “கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டம் ஆரம்பம்!
முதலாம் திகதியிலிருந்து “கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டம் ஆரம்பம்!
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நாளைமறுதினம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
“கிளீன் சிறிலங்கா” திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமாநாயக்க, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட 18 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது.
குறித்த “கிளீன் சிறிலங்கா” திட்டத்தை திட்டமிடல், வழிகாட்டுதல், நடைமுறைப்படுத்துதல், முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவு செய்தல் ஆகியவையே ஜனாதிபதி செயலணியின் பொறுப்புகள் ஆகும்.
