Connect with us

சினிமா

உன்ன வெச்சு படம் பண்ணமுடியல!! சூர்யாவிடம் காரணத்தை சொன்ன இயக்குநர் பாலா..

Published

on

Loading

உன்ன வெச்சு படம் பண்ணமுடியல!! சூர்யாவிடம் காரணத்தை சொன்ன இயக்குநர் பாலா..

இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படம் கடந்த இரு ஆண்டுகளாக உருவாகி வந்த நிலையில் சூர்யா படத்தில் இருந்து விலகி அருண் விஜய் நடித்து வந்தார். படம் முடிந்து வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2025 ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக பாலா பல பேட்டிகளில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில் சூர்யா விலகியப்பின் அருண் விஜய் கமிட்டாகியபோது கதையில் மாற்றம் பண்ணப்பட்டதா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பாலா, அதே தான், அதற்கு முன் ஒரு விஷயம் சொல்லணும். சூர்யா விலகிபின் இல்லை, நாங்கள் ரெண்டு பேரும் பேசி முடிவெடுத்து, வேற படம் பண்ணிக்கலாம். ஏனென்றால் லைவ் லொகேஷனில் உன்ன வெச்சு படம் பண்ணமுடியல, அவ்வளவு கிரெளட் சமாளிக்க முடியல என்று பேசி முடிவெடுத்தது.அவர் விலகிட்டாரு, நான் விலகிட்ட, அப்படியெல்லாம் இல்லை. இப்பவும் ரெண்டு பேருக்கான உறவு இருக்கிறது. நான் ஏதாவது தனிப்பட்ட விதத்தில் தப்பு செய்தால் அதை கண்டிக்ககூடிய உரிமையை நான் சூர்யாவுக்கு கொடுத்து இருக்கிறேன் என்று பாலா ஓப்பனாக பேசியிருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன