இலங்கை
விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். காவல்பட்டாங்கட்டி, புதுக்குடியிருப்பு, பேசாலை பகுதியைச் சேர்ந்த துரைச்சாமி கணபதி (வயது 74) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 2ஆம் திகதி பேசாலை – மன்னார் வீதியால் தனது வீட்டை நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில் அவர் மன்னார் – பேசாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மன்னார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் மூன்றாம் திகதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. (ப)