இலங்கை
யானை தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் சாவு!

யானை தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் சாவு!
முல்லைத்தீவு, நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மாந்தை கிழக்கு மூன்றுமுறிப்பு இளமருதங்குளம் பகுதியில் நேற்று இரவு யானை தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மூன்று முறிப்பு – வீரப்பராயன் குளத்தை சேர்ந்த 68 வயதுடைய சிவஞானம் ஸ்ரீஸ்கந்தராசா என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ப)