Connect with us

உலகம்

சிம்பாப்வேவில் மரண தண்டனையை இரத்து செய்யும் சட்டத்துக்கு ஒப்புதல்!

Published

on

Loading

சிம்பாப்வேவில் மரண தண்டனையை இரத்து செய்யும் சட்டத்துக்கு ஒப்புதல்!

சிம்பாப்வேயில் உடன் அமுலாகும் வகையில் மரண தண்டனையை ரத்து செய்யும் சட்டத்துக்கு அந்த நாட்டு ஜனாதிபதி எம்மர்சன் (ம்)னங்காக்வா (Emmerson Mnangagwa) ஒப்புதல் அளித்துள்ளார். 

இதனை மனித உரிமை கண்காணிப்பு குழுக்கள் வரவேற்றுள்ள போதிலும் அவசர நிலையின் போது மரண தண்டனை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படலாம் என கவலை வெளியிட்டுள்ளன. 

Advertisement

மரண தண்டனையை நீக்குவதற்கான வாக்கெடுப்பு சிம்பாப்வே நாடாளுமன்றில் அண்மையில் இடம்பெற்ற நிலையில் அந்த நாட்டு ஜனாதிபதி தமது ஒப்புதலை அளித்துள்ளார். 

சிம்பாப்வேயில் இறுதியாக 2005ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. எனினும் அதற்குப் பின்னர் கொலை போன்ற கடுமையான குற்றங்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்படுகின்றன. 

இதற்கமைய சிம்பாப்வேயில் 2023ஆம் ஆண்டின் இறுதியில் 60 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்ததாக அந்த நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன