Connect with us

இலங்கை

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த தோட்ட உதவி அதிகாரிக்கு நேர்ந்த கதி!

Published

on

Loading

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த தோட்ட உதவி அதிகாரிக்கு நேர்ந்த கதி!

அக்கரப்பத்தனை – கிளாஸ்கோ பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கஞ்சா செடிகளை வளர்த்து வந்த தோட்ட உதவி அதிகாரி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

இதன்போது 11 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை சுமார் 2 அடி உயரம் வரை வளர்ந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகளையும் இன்று (02) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன