இலங்கை
அனுர அரசின் எம்பி தொடர்பில் சமூக ஊடகங்களில் கருத்து ; முன்னாள் உறுப்பினர் கைது

அனுர அரசின் எம்பி தொடர்பில் சமூக ஊடகங்களில் கருத்து ; முன்னாள் உறுப்பினர் கைது
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்த பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனி இன்று (03) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ரவீந்திர நம்முனி படகொட பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.