Connect with us

இலங்கை

கிழக்கிலும் கடவுச்சீட்டு அலுவலகம் வேண்டும் என கோரிக்கை!

Published

on

Loading

கிழக்கிலும் கடவுச்சீட்டு அலுவலகம் வேண்டும் என கோரிக்கை!

இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் ஒன்றை கிழக்கு மாகாணத்திலும் உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது.

இந்த கோரிக்கையினை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் சபையில் நேற்று (7) விடுத்தார்.

Advertisement

கொழும்பு மற்றும் வடக்கு, தெற்கு, மத்திய மாகாணங்களில் கடவுச்சீட்டு அலுவலகம் காணப்படுவதாகவும் ஆனால், கிழக்கு மாகாணத்தில் அந்த அலுவலகம் கிடையாது என்பதை சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்று இல்லாதமையினால், அங்குள்ள மக்கள் இரண்டு மூன்று தினங்கள் கொழும்புக்கு அலைய வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அதிகளவு உல்லாசப்பிரயாணிகள் வருகைத் தரும் கிழக்கு மாகாணத்திற்கும் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஹிஸ்புல்லாஹ் சபையில் வலியுறுத்தினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன