Connect with us

உலகம்

லாஸ் ஏஞ்சல்ஸை உலுக்கிய காட்டுத்தீ : 30,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!

Published

on

Loading

லாஸ் ஏஞ்சல்ஸை உலுக்கிய காட்டுத்தீ : 30,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!

மேற்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே பரவி வரும் காட்டுத் தீ காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

10 ஏக்கரில் இருந்து 2,900 ஏக்கருக்கு மேல் சில மணி நேரத்தில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், 13,000 வீடுகள் மற்றும் கட்டிடங்களில் வசிக்கும் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தப்பியோடியவர்களில் சிலர் தங்கள் வாகனங்களைக் கூட கைவிட்டுவிட்டனர், மேலும் இதுபோன்ற கைவிடப்பட்ட வாகனங்களால் ஏற்படும் சாலைத் தடைகளை அகற்ற அதிகாரிகள் பேக்ஹோவைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. 

 நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பிரதேசங்களை பனிப்புயல் தாக்கும் பின்னணியில் மேற்கு அமெரிக்காவில் இவ்வாறு காட்டுத்தீ பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன