Connect with us

உலகம்

காட்டுத்தீயின் கோரதாண்டவம்!

Published

on

Loading

காட்டுத்தீயின் கோரதாண்டவம்!

அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல்ஸ் நகரில் நிலவும் பாரிய காட்டுத்தீ அனர்த்தத்தினால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு இலட்சம் பேர் கட்டாயத்தின் அடிப்படையில் இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. காட்டுத்தீயினால் லொஸ் ஏன்ஜல்சிலுள்ள வரலாற்று முக்கியத்தும்வாய்ந்த பல இடங்கள் அழிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement

வரலாற்றில் என்றுமில்லாத காட்டுத்தீ அபாயத்தை தற்போது குறித்த மாநிலம் எதிர்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்கு போதுமான நீர் இல்லாத பிரச்சினைக்கும் தீயணைப்பு வீரர்கள் முகம்கொடுத்துள்ளனர். பருவகால காட்டுத்தீ வழமையான ஒன்றாக இருந்தாலும் இம்முறை கலிபோர்னியா மாநிலம் காட்டுத்தீயினால் இதுவரை முகம்கொடுக்காத அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை காட்டுத்தீ அனர்த்தம் காரணமாக லொஸ் ஏன்ஜல்சில் நடைபெறவுள்ள ஒஸ்கார் விருது விழாவும் பிற்போடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன