Connect with us

இலங்கை

சூர்யா படப் பாணியில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவம்… வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்!

Published

on

Loading

சூர்யா படப் பாணியில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவம்… வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்!

சமீபத்தில் சென்னை​யில் கைது செய்​யப்​பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்​பலுக்கும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்​பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை​யில் போதைப்பொருள் கடத்​தலில் ஈடுபடும் கும்பலை சேர்ந்த பலரை கடந்த அக்டோபர் மாதம் முதல் அரும்பாக்கம் காவல் நிலைய தனிப்​படை​யினர் கைது செய்து வருகின்​றனர்.

Advertisement

இந்த கும்​பலைச் சேர்ந்த ராஜா, அவரது கூட்​டாளி சத்திய சீலன் ஆகியோர் 2 தினங்​களுக்கு முன்னர் கைது செய்​யப்​பட்​டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 50 கோடி மதிப்புள்ள மெத்​தம்​பெட்​டமைன், 5 துப்​பாக்​கி​கள், 79 தோட்​டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்​யப்​பட்​டது.

இந்த கும்​பலுக்கு தலைவனாக செயல்​பட்ட தென்​னாப்​பிரிக்கா நாட்​டைச் சேர்ந்த ஜான் ஒக்காபரை கடந்த 3-ம் திகதி புதுடில்​லி​யில் வைத்து பொலி​ஸார் கைது செய்​தனர்.

Advertisement

அவரிடம் பொலிஸார் நடத்திய விசா​ரணை​யில், ‘மியான்மரிலிருந்து மெத்தம்பெட்டமைன், கெட்டமைன் போன்ற போதைப் பொருட்கள் டெல்​லிக்கு கடத்​தப்​பட்டு அங்கிருந்து அவை தமிழகம் கொண்டு வரப்​பட்டு, தமிழகத்​திலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்​தப்​படுவது தெரிய​வந்துள்ளது.

இந்த கும்​பல், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்​பலைச் சேர்ந்த கஞ்சிப்​பானை இம்ரான் உத்தரவுப்படி செயல்​பட்​டிருப்​பதும், தெரியவந்துள்ளது.

மேலும், இலங்​கை​யைச் சேர்ந்த கஞ்சிப்​பானை இம்ரான் 2 வருடங்களாக  தலைமறைவாக இருப்​பதும், போதைப் பொருள் கடத்​தலில் ஈடுபடு​வதும், பாகிஸ்​தான், ஆப்கானிஸ்​தான், இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடு​களில் இருந்து ஐரோப்பிய நாடு​களுக்கு போதைப் பொருளை கடத்து​வதும் தெரிய​வந்​தது.

Advertisement

கஞ்சிப்​பானை இம்ரான் கேட்​டதன் பேரிலேயே நாட்டுத் துப்​பாக்​கி​களை​யும் அந்த கும்பல் கடத்​தி​யிருப்பது தெரிய​வந்​துள்ளது.

கஞ்சிப்​பானை இம்ரான் நெருங்கிய தொடர்​பில் இருந்த இந்த கும்​பலைச் சேர்ந்​தவர்களை பொலிஸார் தடுப்புக் காவலில் எடுத்து விசா​ரிக்க திட்​ட​மிட்​டுள்​ளனர்.

இதேவேளை, கஞ்சிப்​பானை இம்ரான் இலங்கையிலிருந்து தப்பித்து இந்தியா​ சென்று அங்கிருந்து பிரான்ஸ் சென்றதாக கூறப்படுகிறது.

Advertisement

கஞ்சிப்​பானை இம்ரான் இந்தியாவில் தலைமறைவாக இருக்​கிறாரா என்றும் க்யூ பிரிவு பொலிஸார் தீவிர விசா​ரணை​யில் ஈடுபட்டுள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன