இந்தியா
நேற்று ஆரம்பமான கும்பமேளா இந்து மத விழா!

நேற்று ஆரம்பமான கும்பமேளா இந்து மத விழா!
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை ஈர்க்கும் கும்பமேளா இந்து மத விழா இந்தியாவின் பிரயாக்ராஜில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.
400 மில்லியனுக்கும் அதிகமான இந்து பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த விழா, விண்வெளியில் இருந்து கூட தெரியும் என்று ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா இந்து மத விழா இந்த ஆண்டு 45 நாட்கள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டும், 400 மில்லியனுக்கும் அதிகமான இந்து பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, நிகழ்வைப் பாதுகாக்கவும், வருகை தரும் பக்தர்கள் உள்ளிட்ட கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் 40ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 1லட்சம் பாதுகாப்புப் பணியாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.