உலகம்
தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் கைது!

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் கைது!
தென் கொரியாவின் முன்னாள்அதிபர் யூன் சுக் இயோல், அந்நாட்டின் உயர் அதிகாரிகளுக்கான ஊழல் புலனாய்வு அலுவலகத்தால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது ஒரு பதவியில் இருக்கும் தென் கொரியத் தலைவருக்கு முதல் முறையாகும்.
ஜனவரி 3 ஆம் திகதி தென் கொரியாவின் ஜனாதிபதி பாதுகாப்பு சேவையின் முகவர்கள் யூனின் இல்லத்திற்குள் நுழைந்தபோது அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார். இதனால் இந்த முயற்சி தோல்வியடைந்தது.
இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக முயற்சிக்கப்பட்டுள்ளது. கைது வாரண்டை நிறைவேற்றுவதற்கான இரண்டாவது முயற்சியில் சுமார் 1,000 காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது முதல் முயற்சியை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம்.