உலகம்
ஈரான் துப்பாக்கிசூட்டில் இரண்டு நீதிபதிகள் சாவு!

ஈரான் துப்பாக்கிசூட்டில் இரண்டு நீதிபதிகள் சாவு!
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உயர்நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற நீதிபதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், நீதிபதிகள் மொஹிசா மற்றும் அலி ரசானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு பாதுகாவலர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் பின்னர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
உயிரிழந்த நீதிபதிகள் தீவிர அடிப்படைவாதக் கொள்கைகளை பின்பற்றி, போராட்டக் குழுக்கள் மீது கடுமையான தீர்ப்புகளை வழங்கியவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் ஈரான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.