Connect with us

இந்தியா

திடீரென கேட் வெடிச்சத்தம்: எம்.எல்.ஏ வீட்டில் திரண்ட மக்கள்; புதுச்சேரியில் பதற்றம்!

Published

on

Puducherry Bomb

Loading

திடீரென கேட் வெடிச்சத்தம்: எம்.எல்.ஏ வீட்டில் திரண்ட மக்கள்; புதுச்சேரியில் பதற்றம்!

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை வாஞ்சிநாதன் வீதி பகுதியில் இன்று காலை 5.00 மணி அளவில் திடீரென மிக அதிக சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. இது என்ன என்று தெரியாமல் அப்பகுதி மக்கள் உடனடியாக உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவன தலைவருமான நேருவிடம் தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக காலை 6.00 மணி அளவில் சம்பவ இடத்துக்கு விரைந்து பெரியக்கடை காவல் நிலைய ஆய்வாளர் ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து வெடித்தது மர்ம பொருளா அல்லது தற்போது உருளையன்பேட்டை தொகுதி அமைதியாக உள்ளது என சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக யாரேனும் சமூக விரோதிகளை ஏவி விட்டு வெடிகுண்டு வெடிக்க செய்தார்களா என்று காவல்துறையினை விசாரணை மேற்கொண்டனர். நேரு(எ)குப்புசாமி MLA  தெரிவித்து இது அரசியல் சமூகவிரோதிகளின் செயலாக இருக்கும் என அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன