Connect with us

உலகம்

கொலம்பியாவில் கொரில்லா வன்முறை: கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 80 பேர் சாவு!

Published

on

Loading

கொலம்பியாவில் கொரில்லா வன்முறை: கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 80 பேர் சாவு!

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இரு இடதுசாரி கொரில்லா ஆயுதக் குழுக்கள் இடையிலான மோதலில் 80 போ் உயிரிழந்தனர்.

வெனிசுலாவை ஒட்டிய கொலம்பிய எல்லைப் பிரதேசத்தில் உள்ள கேட்டடம்போ பகுதியில் தேசிய விடுதலை ராணுவம் (இஎல்என்), கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படை (ஃபாா்க்) ஆகிய இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்துள்ளது.

Advertisement

ஃபாா்க் அமைப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு நிராயுதபாணியை செயல்படாமல் இருந்தது. இந்நிலையில் ஃபாா்க் அமைப்பைச் சோ்ந்தவா்களை வீடு வீடாகத் தேடிச் சென்று இஎல்என் அமைப்பினா் படுகொலை செய்து வருகின்றனர்.

இரு குழுக்களின் வன்முறைக்கு மத்தியில் பொதுமக்கள் சிக்கியுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. கடந்த வியாழக்கிழமை முதல் 3 நாளில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக கொலம்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழன் முதல் வன்முறை சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அப்பகுதிகளில் இருந்து சுமார் 5,000 பேர் தங்கள் வீடுகளை கைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர். பாதுகாப்பை பலப்படுத்த 5,000க்கும் மேற்பட்ட வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, இஎல்என்-னுடன் நடத்திவந்த போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தையை கொலம்பியா அரசு நிறுத்திவைத்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கோகைன் வர்த்தக தலமாக உள்ள இப்பகுதியில் யார் வர்தகத்தை கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக போட்டி குழுக்கள் பல ஆண்டுகளாக இப்பகுதியில் சண்டையிட்டு வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன