உலகம்
வெனிசுலாவின் கக்கடா மாகாணத்தில் அவசர நிலைமை அறிவிப்பு!

வெனிசுலாவின் கக்கடா மாகாணத்தில் அவசர நிலைமை அறிவிப்பு!
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் கக்கடா மாகாணத்தில் அவசர நிலையை அறிவித்து கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டுள்ளார்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் கக்கடா மாகாணத்தில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றதுடன் அவர்கள் அண்டை நாடான கொலம்பியாவின் எல்லைக்குள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக மக்கள் மற்றும் பொதுச்சொத்துகளை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்துவதால் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இதனை தடுக்க எல்லை பகுதியில் கொலம்பியா ராணுவ வீரர்களை நிலைநிறுத்தி உள்ளதாகவும் கொலம்பியா எல்லை வழியாக கிளர்ச்சியாளர்கள் நுழைந்து மோதல் நடத்தியுள்ளதாகவும் இந்த மோதலில் இருதரப்பிலும் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.