Connect with us

இந்தியா

தினமும் 20 லிட்டா் குடிநீா் கேன் விநியோகம்: புதுச்சேரி அமைச்சா் லட்சுமி நாராயணன் உத்தரவு

Published

on

அக்டோபர் 28ஆம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

Loading

தினமும் 20 லிட்டா் குடிநீா் கேன் விநியோகம்: புதுச்சேரி அமைச்சா் லட்சுமி நாராயணன் உத்தரவு

புதுச்சேரியில் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கு அரசு சாா்பில் தினமும் 20 லிட்டா் குடிநீா் கேன் விநியோகிக்க பொதுப் பணித் துறை அமைச்சா் லட்சுமி நாராயணன் உத்தரவிட்டுள்ளாா்.குடிநீரின் தரம் குறித்து பொதுப் பணித் துறை பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளா், உதவிப் பொறியாளா்கள் மற்றும் இளநிலைப் பொறியாளா்களுடன் அமைச்சா் லட்சுமிநாராயணன்  ஆய்வுக்கூட்டம் நடத்தினாா்.இதில், டிடிஎஸ் அளவு அதிகமுள்ள பகுதிகளில் உடனடியாக கூடுதல் குடிநீா் சுத்திகரிக்கும் கருவிகளை (ஆா்ஓ யூனிட்ஸ்) நிறுவவும், பழுதடைந்தவைகளையும் சீரமைத்து பயன்படுத்தவும் உத்தரவிட்டாா்.அத்துடன், நகா்ப் பகுதியில் டிடிஎஸ் 1,500 எனும் அளவுக்கும் அதிகமான நிலையில், ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீரை மேல்நிலை நீா்த்தேக்க வளாகங்களில் சேமிக்கவும், அதன்பின் குடிநீா் சுத்திகரிப்பு கருவிகளை நிறுவி, நீரைச் சுத்திகரித்து, கேன்களில் அடைத்து வீடுகளுக்கு தலா 20 லிட்டா் வீதம் விநியோகிக்கவும் உத்தரவிட்டாா்.புதுச்சேரி நகராட்சியில் உருளையன்பேட்டை, உப்பளம், ராஜ்பவன், முத்தியால்பேட்டை, காமராஜ் நகா் ஆகிய தொகுதிகளில் உள்ள வீடுகளுக்கு முதல் கட்டமாக 15 நாள்களுக்குள் கேன் மூலம் குடிநீா் வழங்க அறிவுறுத்தினாா்.நீா்நிலைகளில் இருந்து சுத்திகரித்து மக்களுக்கு நல்ல குடிநீா் வழங்கும் வரை இடைக்கால ஏற்பாடாக இந்த முறை தொடர வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன