Connect with us

டி.வி

செண்டிமெண்டாக பேசி வீட்டைவிட்டு கிளப்பிய ராதிகா.. இறுதியில் பாக்கியாவுக்கு சொன்ன வார்த்தை

Published

on

Loading

செண்டிமெண்டாக பேசி வீட்டைவிட்டு கிளப்பிய ராதிகா.. இறுதியில் பாக்கியாவுக்கு சொன்ன வார்த்தை

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட், ஈஸ்வரி கோபியிடம் ராதிகா என்ன சொன்னார் என்று கேட்க, அவர் தனது முடிவில் இருந்து மாறவில்லை என சோகமாக பதில் சொல்லுகின்றார். இதனால் ஈஸ்வரி அடிக்கடி என்ன வந்து பாரு.. உடம்ப கவனி என்று அவருக்கு அட்வைஸ் பண்ணி சாப்பாடும் கொடுக்கின்றார். இனியாவும் கோபி போவதை ஏற்றுக்கொண்டு தைரியமாக இருக்கின்றார்.அந்த நேரத்தில் ராதிகாவும் மையூவும் தமது பெட்டிகளுடன் கீழே வருகின்றார்கள். இதை பார்த்து மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றது. இதன்போது ராதிகா பாக்யாவிடம் நேரடியாக சென்று இனிமேல் நான் உங்களுக்கு தொந்தரவாக இருக்க மாட்டேன். ஒரு நண்பியா நீங்க எனக்கு நிறைய நல்லது செய்து இருக்கீங்க என்று பேசுகின்றார்.அதன் பின்பு ராதிகா வந்ததும் கோபி தனது லக்கேஜ் எடுக்கச் சொல்லுகின்றார். ஆனாலும் ஈஸ்வரி கோபி அடிக்கடி மாடிப்படி ஏற வேணாம் என்று செழியனிடம் லக்கேஜை எடுத்து வருமாறு  சொல்லுகின்றார். இதன் போது ராதிகா யாரும் கோபியின் லக்கேஜை எடுக்க வேண்டாம்.. அது இங்கேயே இருக்கட்டும் என்று சொல்லுகின்றார்.மேலும் நானும் மையூவும் தான் வீட்டை விட்டுப் போகிறோம். நீங்க இங்கேயோ இருங்க என்று அதிர்ச்சி கொடுத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் தான் இந்த வீட்டுக்கு மீண்டும் வர காரணம் உங்களுடைய உடல் நிலை குறித்து தான்.. நான் ஏற்கனவே  பல விடயங்களை யோசித்து விட்டேன். நீங்க இந்த வீட்டில் இருக்கும் போது தான் நன்றாக சிரித்து சந்தோஷமாக இருக்கின்றீர்கள்.. அதனால் இங்கேயே இருங்கள் என்று ராதிகா சொல்லுகின்றார்.இறுதியில் இனியாவிடம் உன்னுடைய அப்பாவை உன்னிடமே விட்டுச் செல்கின்றேன் என்று சொல்லுகின்றார். பாக்கியாவிடம் நான் எடுத்த இந்த முடிவு உங்களுக்கு சாதகமா பாதகமா என்று தெரியவில்லை. ஆனால் நீங்க ரொம்ப நல்லவங்க என்று சொல்லிக் கிளம்புகின்றார். இறுதியில் ராதிகா போகும்போது இனியா அவரிடம் மன்னிப்பு கேட்டு கட்டி அணைத்து கொள்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட் .

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன