Connect with us

இந்தியா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 4,200 இந்தியர்கள் விசாரணையில் உள்ளனர்: அமலாக்கத்துறை

Published

on

US Deportation

Loading

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 4,200 இந்தியர்கள் விசாரணையில் உள்ளனர்: அமலாக்கத்துறை

அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேறியதாக சந்தேகிக்கப்படும் குறைந்தது 4,200 இந்தியர்களை விசாரித்து வருவதாக அமலாக்க இயக்குநரகம் (இ.டி) கூறியுள்ளது.ஆங்கிலத்தில் படிக்க: 4,200 Indians under probe for illegally immigrating to US in past 3 years: ED probeகுஜராத் மற்றும் பஞ்சாபில் உள்ள முகவர்கள் பல்வேறு வழிகளில் சட்டவிரோதமாக மக்களை அமெரிக்காவிற்கு அனுப்புவது தொடர்பான தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக, இந்தியர்கள் கனடாவிற்கு அனுப்பப்பட்டு பின்னர் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்படுவது தொடர்பான 4,000-க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை இ.டி கண்டறிந்துள்ளது.அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக இந்தியர்கள் குடியேறுவதற்கு பல முகவர்கள் கல்வி வழியை எடுத்துள்ளதாக இ.டி விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் கீழ், அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு கடனா கல்லூரிகளில் சேர்க்கை வழங்கப்படுகிறது. இந்த சேர்க்கைகளின் அடிப்படையில், அவர்களுக்கு கனடா விசாக்கள் மற்றும் கனடாவில் இடம் கிடைப்பதில்லை. ஆனால், இந்த “மாணவர்கள்” ஒருபோதும் கல்லூரியில் சேர மாட்டார்கள். மேலும், கனடாவில் உள்ள தொடர்புடைய முகவர்களால் தரைவழியாக அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.“கனடாவை தளமாகக் கொண்ட கல்லூரிகளுக்கான கட்டணம் வெளிநாட்டு பணம் அனுப்பும் சேவைகளை வழங்கும் நிதி சேவை நிறுவனமான எபிக்ஸ்கேஷ் (EbixCash) மூலம் செலுத்தப்பட்டது. விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. எபிக்ஸ்கேஷ் (EbixCash) தொடர்பாக விசாரித்ததில், குஜராத் மாணவர்களின் சார்பாக கனடாவை தளமாகக் கொண்ட பல்வேறு கல்லூரிகளுக்கு 07.09.2021 முதல் 09.08.2024 வரை சுமார் 8,500 பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாக சேகரிக்கப்பட்டுள்ளது” என்று இ.டி விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.இந்த அறிக்கையின்படி, இந்த 8,500 பரிவர்த்தனைகளில், சுமார் 4,300 போலி தனிநபர்கள் அல்லது பயனர்கள், ஒரே நபருக்கு எதிராக இரண்டு முறை பரிவர்த்தனை பதிவு செய்யப்பட்டுள்ளதைக் குறிக்கின்றன. “இவ்வாறு, மொத்தம் இதுபோன்ற 4,200 பரிவர்த்தனைகள் விசாரணையில் உள்ளன. இதுபோன்ற ஒவ்வொரு பரிவர்த்தனையுடனும் இணைக்கப்பட்ட நபரை கனடா வழியாக அமெரிக்காவிற்கு அனுப்பும் நோக்கத்துடன் இந்த பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது” என்று இ.டி-யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.இ.டி அறிக்கையின்படி, அவர்கள் கமிஷனைப் பெற்ற பிறகு, அதாவது அந்த கமிஷன் ரூ.40-50 லட்சம் வரை இருக்கலாம். முகவர்கள் அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு கனடா கல்லூரிகளில் சேர்க்கையை ஏற்பாடு செய்து கட்டணம் செலுத்துகிறார்கள். குடியேறியவர் கனடாவை அடைந்தவுடன், ஏதாவது ஒரு சாக்குப்போக்கில் சேர்க்கை திரும்பப் பெறப்படுகிறது. ரூ.60 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான கட்டணங்கள் திரும்பப் பெறப்படுகின்றன. ஆனால், அவர்களின் விசாக்களில் எந்த பாதிப்பும் இல்லை.இந்த சட்டவிரோத குடியேற்றங்களை செயல்படுத்த முகவர்கள் நிதி பரிவர்த்தனைகளின் சிக்கலான கட்டமைப்பை உருவாக்கியதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டது. முதலில் அவர்கள் சாத்தியமான புலம்பெயர்ந்தோருக்கான கணக்கைத் தொடங்கினர். அதில் கல்லூரி சேர்க்கை கட்டணம் செலுத்துவதற்கு போதுமான பணம் முகவர்களால் டெபாசிட் செய்யப்பட்டது. இது பின்னர் ஒரு நிலையான வைப்புத்தொகைக்கு மாற்றப்பட்டது, இது ஓவர் டிராஃப்ட் கணக்கைத் தொடங்கப் பயன்படுத்தப்பட்டது. பின்னர், எபிக்ஸ் மூலம் பணம் அனுப்பப் பயன்படுத்தப்பட்டது. சேர்க்கை திரும்பப் பெறப்பட்டவுடன் பணம் ஓவர் டிராஃப்ட் கணக்கிற்குத் திரும்பிச் சென்று பின்னர் மூன்றாவது நபருக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், ஓவர் டிராஃப்ட் கணக்கை மூட எஃப்.டி பயன்படுத்தப்பட்டது.பல அடுக்கு பரிவர்த்தனைகளை உருவாக்கவும், நிதி தடங்களை மறைக்கவும் இது செய்யப்பட்டதாக இ.டி வட்டாரங்கள் தெரிவித்தன. அதிக அளவு பரிவர்த்தனைகள் அமலாக்க நிறுவனங்களால் கண்காணிக்கப்படும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை அறிக்கைகளை உருவாக்குவதை ஓவர் டிராஃப்ட் கணக்குகளின் பயன்பாடு உறுதி செய்தது. சேமிப்பு வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் கடுமையான சோதனைகளில் இருந்து தப்பிக்க எபிக்ஸ் போன்ற கட்டண நுழைவாயில்களைப் பயன்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.2022-ம் ஆண்டு கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு கடக்கும்போது சிக்கிக்கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இறந்தது தொடர்பாக குஜராத் காவல்துறையின் ஜனவரி 2023 முதல் தகவல் அறிக்கையின் (FIR) அடிப்படையில் இ.டி இந்த விவகாரம் குறித்து விசாரணைகளைத் தொடங்கியது. அந்த நேரத்தில் கனடா வழியாக அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக நுழைய முயன்றதற்காக மேலும் 7 இந்தியர்கள் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.குஜராத்தை தளமாகக் கொண்ட கல்வி குடியேற்ற நிறுவனமான கே.ஐ.இ.சி (KIEC) இன்டர்நேஷனல் எல்.எல்.பி மூலம் இறந்தவருக்கு விசாக்களை ஏற்பாடு செய்ததாக பாவேஷ் படேல் என்பவர் கண்டறியப்பட்டார். இது இதுபோன்ற பல சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளுக்கு வழிவகுத்ததாக விசாரணையில் உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன