Connect with us

இந்தியா

ஏ.டி.எம். மில் பணத்தை நிரப்பாமல் மோசடி!

Published

on

Loading

ஏ.டி.எம். மில் பணத்தை நிரப்பாமல் மோசடி!

பெங்களூரில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் ஊழியர்கள் சிவு, சமீர், மனோகர், கிரிஷ், ஜக்கேஷ், ஜஸ்வந்த் ஆகிய 6 பேர் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பாமல் சுழற்சி முறையில் ஒவ்வொரு எந்திரத்திலும், பணத்தை மாற்றி, மாற்றி வைத்து ரூ. 43.76 லட்சத்தை மோடி செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து நிறுவன அதிகாரிகள் அவர்கள் மீது பொலிஸில் புகார் செய்ததையடுத்து ஊழியர்கள் 6 பேரையும் விசாரித்துள்ளனர்.

Advertisement

அவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஒரு கொள்ளை திரில்லர் படத்தை பின்பற்றி ஏ.டி.எம்.மில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த பொலிஸார் அவர்களிடம் இருந்து ரூ. 52 லட்சம் மதிப்புள்ள ரொக்கம், ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 3 சொகுசு கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இவர்கள் பல மோசடிகளில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன