இலங்கை
சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக டிசம்பரில் நடைபெறவிருந்த இலங்கை சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சையை பிற்போடுவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இன்று (28) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட புள்ளியியல் மற்றும் புள்ளியியல் அதிகாரிகளுக்கான வெட்டுப் பரீட்சை (2016ஃ24) ஒரே திகதிகளில் நடத்தப்படாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பான இரண்டு பரீட்சைகளும் டிசம்பர் 1 ஆம் மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த நிலையில் அது தொடர்பான பரீட்சைகள் அந்தத் திகதிகளில் நடைபெறாது என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.