Connect with us

இந்தியா

புதிய தேர்தல் ஆணையர் நியமனம்; யார் இந்த விவேக் ஜோஷி?

Published

on

vivek joshi

Loading

புதிய தேர்தல் ஆணையர் நியமனம்; யார் இந்த விவேக் ஜோஷி?

Sukhbir Siwachஹரியானா மாநிலத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, 1989-ஐச் சேர்ந்த ஹரியானா கேடரின் ஐ.ஏ.எஸ் அதிகாரியான விவேக் ஜோஷி, தேர்தல் ஆணையராக (EC) நியமிக்கப்பட்டார். விவேக் ஜோஷி தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் பிரகாஷ் மற்றும் சக தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்துவுடன் இணைந்து மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையமாக பணியாற்றுவார்.இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்டி.வி.எஸ்.என் பிரசாத் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து நவம்பர் 2024 இல் ஹரியானாவின் தலைமைச் செயலாளராக விவேக் ஜோஷி பொறுப்பேற்றார். ஹரியானா அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில், மத்திய அரசுப் பணியிலிருந்து அவரது மாநில கேடருக்குத் திருப்பி அனுப்புவதற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்த பின்னர் விவேக் ஜோஷி தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.அவர் திருப்பி அனுப்பப்படுவதற்கு முன், விவேக் ஜோஷி மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அமைச்சகத்தில் பணியாளர் மற்றும் பயிற்சி துறை செயலாளராக இருந்தார். ஜனவரி 2019 இல் தொடங்கிய இந்த சமீபத்திய மத்திய அரசு பணிகளின் போது, விவேக் ஜோஷி, நிதிச் சேவைகள் துறையின் செயலாளராகவும், உள்துறை அமைச்சகத்தில் இந்தியப் பதிவாளர் ஜெனரல் & சென்சஸ் கமிஷனராகவும் பணியாற்றினார்.மத்திய அரசுப் பணிக்கு முன், விவேக் ஜோஷி அம்பாலா பிரிவின் ஆணையர், முதன்மை குடியுரிமை ஆணையர் (புது டெல்லி) மற்றும் குருகிராம் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 2017 முதல் ஜனவரி 2019 வரை ஹரியானா அரசாங்கத்தில் பணியாற்றினார்.விவேக் ஜோஷி 2010 முதல் 2017 வரை மத்திய அரசில் இருந்தார், நிதி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகங்களில் இணைச் செயலாளராகப் பணியாற்றினார்.ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக, ஜோஷி தனது அதிகாரத்துவ வாழ்க்கையை 1991 இல் ஹரியானாவின் கோஹானா நகரில் துணை மாவட்ட அதிகாரியாக (சிவில்) தொடங்கினார். மாநிலத்தில் பல்வேறு பணிகளுக்குப் பிறகு, விவேக் ஜோஷி 2001 இல் ஏற்றுமதி இயக்குநராக மத்திய அரசுப் பணிக்குச் சென்றார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜைச் சேர்ந்த விவேக் ஜோஷி, மே 31, 2026 அன்று ஐ.ஏ.எஸ் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக சுமார் 34 ஆண்டுகள் பணியாற்றிய விவேக் ஜோஷி, மத்திய அரசில் 18 ஆண்டுகள் பிரதிநிதியாகப் பணியாற்றியுள்ளார்.விவேக் ஜோஷி ஐ.ஐ.டி ரூர்க்கியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர் மற்றும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள சர்வதேச மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளின் பட்டதாரி நிறுவனத்தில் சர்வதேச பொருளாதாரத்தில் தனது பி.எச்.டி படிப்பை முடித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன