இலங்கை
ஜே.வி.பியினர் மக்களை ஏமாற்றுவதாக கூறும் சுமந்திரன்!

ஜே.வி.பியினர் மக்களை ஏமாற்றுவதாக கூறும் சுமந்திரன்!
பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்கப்படுவதுடன் அதற்காக மாற்று சட்டமொன்று உருவாக்கப்படக் கூடாதென தெரிவிருந்த ஜே.வி.பியினர் தற்போது அதற்குப் புறம்பாகச் செயற்படுவதாக இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தைப் போன்று வேறு எந்த சட்டமும் உருவாக்கப்படக் கூடாது என தெரிவித்திருந்த தரப்பினர் தற்போது மக்களை ஏமாற்றுவதாகவும் இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.