Connect with us

இலங்கை

கொட்டாஞ்சேனை கொலைக்குப் பின்னால் அரசாங்க எம்.பி?

Published

on

Loading

கொட்டாஞ்சேனை கொலைக்குப் பின்னால் அரசாங்க எம்.பி?

  கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் அரசாங்க எம்பி ஒருவருக்கு தொடர்பிருப்பதாக வெளியான தகவல் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ விளக்கமளித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுக்குப் பின்னால், அவர்களுக்கு உதவி செய்ததாகக் கூறி ஆளும் கட்சி எம்.பி ஒருவர் இருப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமைச்சரவை ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர்,   அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவிடம் கேள்வி எழுப்பினார்.

Advertisement

எனினும், அந்த அறிக்கையை மறுத்த அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ , அத்தகைய அறிக்கை எதுவும் இல்லை என கூறியதுடன், வேறு யாரும் அத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை என்றும், எதிர்க்கட்சி உறுப்பினர் கூட அத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், ஆளும் கட்சி எம்.பிக்கள் எவரும் இதற்குப் பின்னால் இல்லை என்று தான் உறுதியளிக்க முடியும் என்றும், மற்றவர்களைப் பற்றி தனக்குத் தெரியாது என்றும் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ கூறினார்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன