Connect with us

சினிமா

மீண்டும் அஜித்துடன் இணையும் ஷாலினி..! வெளியான தகவல் இதோ!

Published

on

Loading

மீண்டும் அஜித்துடன் இணையும் ஷாலினி..! வெளியான தகவல் இதோ!

திருமணத்திற்குப் பிறகு சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த நடிகை ஷாலினி மீண்டும் திரையுலகிற்குத் திரும்பவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிகரமான பல திரைப்படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த ஷாலினி திரையுலகில் மீண்டும் ஒரு புதிய பரிணாமத்தை உருவாக்க உள்ளார்.ஏற்கனவே 90களின் ஆரம்பகட்டத்திலும் பல வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் ஷாலினி. சிறுவயதில் அனியாழி , என் ராசாவே போன்ற படங்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமானார். பின்னர் காதலுக்கு மரியாதை , அமர்க்களம் போன்ற படங்களில் கதாநாயகியாகவும் மகத்தான வரவேற்பைப் பெற்றார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய அவருக்கு தற்பொழுது மீண்டும் திரை உலகிற்குத் திரும்பும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இத்தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஷாலினி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.திரையுலகில் சிறந்த நடிகையாக திகழ்ந்த ஷாலினியின் வருகை பற்றிய தகவல் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நடிகை ஷாலினி திரைக்கு திரும்பி வருதல் சினிமா ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன