Connect with us

உலகம்

சூடான் விமான விபத்தில் 20 இற்கும் மேற்பட்டோர் சாவு!

Published

on

Loading

சூடான் விமான விபத்தில் 20 இற்கும் மேற்பட்டோர் சாவு!

சூடான் நாட்டின் தலைநகர் கார்ட்டூமின் புறநகர்ப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 20 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு வு கார்ட்டூமின் வடக்கு ஓம்துர்மானில் உள்ள வாடி சீட்னா இராணுவ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது விமானம் விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

தொழினுட்ப கோளாறு காரணமாக விபத்து நேர்ந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கார்ட்டூமில் மூத்த தளபதியான மேஜர் ஜெனரல் பஹ்ர் அகமது இறந்தவர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது.

மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன