Connect with us

இந்தியா

தமன்னா, கஜோல் பெயரை வைத்து கிரிப்டோ கரன்சி மோசடி: ரூ. 25 கோடி வரை ஏப்பம் விட்ட மர்ம கும்பல்; புதுச்சேரியில் 2 பேர் கைது

Published

on

Puducherry crime branch police arrest 2 over Cryptocurrency Fraud Allegations Rs 25 crores Tamannaah Bhatia Kajal Aggarwal Tamil News

Loading

தமன்னா, கஜோல் பெயரை வைத்து கிரிப்டோ கரன்சி மோசடி: ரூ. 25 கோடி வரை ஏப்பம் விட்ட மர்ம கும்பல்; புதுச்சேரியில் 2 பேர் கைது

“கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யுங்கள் பல மடங்கு லாபத்தை தருகிறோம் என ஆசை வார்த்தை கூறி புதுச்சேரியைச் சேர்ந்த 10 நபர்களிடம் 2 கோடியே 40 லட்ச ரூபாய் பணத்தை முதலீடு செய்ய வைத்தனர். அந்த பணத்தை எடுக்க முடியாமலும் போட்ட பணம் கூட கிடைக்க முடியாமல் கிரிப்டோ கரன்சியாக கூட வாங்க முடியாமல் பணத்தை நஷ்ட படுத்தி விட்டார்கள்” என்று புதுச்சேரி லாஸ்பேட்டை சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் அசோகன் என்பவர் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகார் சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து இணைய வழி காவல் துறை காவல் ஆய்வாளர் கீர்த்தி விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் எஸ்.எஸ்.பி நாரா சைதன்யா கிரிப்டோ கரன்சி சம்பந்தமான அறிவுரைகளையும் பின்பற்றி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கரன்  ஆலோசனின் படி விசாரணை மேற்கொண்டனர். இந்த மோசடி கும்பல் கோயமுத்தூரை தலைமையிடமாக கொண்டு சினிமா நடிகை தமன்னா மற்றும் பல்வேறு சினிமா பிரபலங்கள் தொழிலதிபர்கள் கலந்து  கொண்டு மிக பிரம்மாண்டமாக 2022இல் துவக்க விழாவை நடத்தியுள்னர்.மூன்று மாதங்களுக்கு பிறகு நடிகை கஜோல் அகர்வாலை வைத்து மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு ஹோட்டலில் 100 நபர்களுக்கு ஒரு கோடி ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் இருக்கின்ற கார்களை அவர்கள் முதலீடு செய்ததற்கு ஏற்ப பரிசாக வழங்கியுள்ளனர். மும்பையில் கப்பலில் மிகப்பெரிய விழாவை ஏற்பாடு செய்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்த விழாவை பயன்படுத்தி பொதுமக்களிடமிருந்து நிதியை திரட்டியது தெரியவந்தது கிரிப்டோ கரன்சி எந்த விதமான கிரிப்டோ கரன்சி டிரேடிங் ஆப்களிலும் வரவில்லை என்பதும் பணத்தை நேரடியாக இவர்கள் ஹைபை சர்க்கிள் என்ற ஒரு வங்கி கணக்கிற்கு புதுச்சேரியை சேர்ந்த அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. டி.சி எக்ஸ் என்ற ஒரு காயினை உங்களுக்கு அனுப்புகிறோம் என்று சொல்லி இவர்களாக உருவாக்கிய ஒரு கிரிப்டோ கரன்சியை புதுச்சேரி நபர்களுக்கு அனுப்பி அந்த டிசிஎஸ் காயினை வவிற்பனை செய்ய முடியவில்லை. பழையபடி பணமாக மாற்ற முடியாமலும் திகைத்தனர். அஸ்.பே என்கிற பிளாட்பார்மை காணாமல் போகச் செய்து அனைவருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியது உள்ளனர்புதுச்சேரி சேர்ந்தவர்களுக்கு மட்டும் 3.4 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்படுத்தி சம்பந்தமாக புகார் அளித்துள்ளனர். மோசடி கும்பல் மீது டெல்லி ஒரிசா மகாராஷ்டிரா மும்பை கோயமுத்தூர் பெங்களூர் பாண்டிச்சேரி ஆந்திர பிரதேஷ் கேரளா விழுப்புரம் திருப்பூர் போன்ற இடங்களில் வழக்குப்பதிவு செய்ததும், இணைய வழி மோசடிக்காரர்களுக்கு அக்கவுண்டை வாங்கி கொடுத்து பல கோடி ரூபாய் பணத்தை மோசடிக்காரர்கள் திருட இவர்கள் உடந்தையாக இருந்ததும் இரண்டு வழக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுகோயம்புத்தூர் மோசடி கும்பல் ஈடுபட்டிருப்பதும் அவர்கள் மீது புதுச்சேரியில் ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதே வழக்கு சம்பந்தமாக மேற்படி குற்றவாளிகள் இம்ரான் பாஷா ராய்ப்பூர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரிய வருகிறது.முதுநிலை காவல் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தல் படி, பல்வேறு இணைய வழி உப்பிகளையும் புதுச்சேரி காவல் நிலையத்தில் இருக்கின்ற புதிய வகை மென்பொருளில் வைத்து மேற்படி நபர்களை அடையாளம் காணப்பட்டுள்ளது.  விசாரணையின் அடிப்படையில் நேற்று கீர்த்தி மற்றும் தியாகராஜன் தலைமை காவலர் மணிமொழி பாலாஜி தலைமையிலான தனிப் படை போலீஸ் சார், கோயமுத்தூரில் வைத்து நித்தீஷ் ஜெயின் மற்றும் அரவிந்த் என்ற இரண்டு நபர்களை கைது செய்து தலைமறைவாக உள்ள நபர்களை தேடி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் கோயம்புத்தூர் பெங்களூர் சென்னை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கோயம்புத்தூர் சேர்ந்த தாமோதரன் நூறுமுகமது சந்தானம் இம்ரான்பாஷா நந்தியப்பன் கணேசன் ஆலியா ரேஷ்மாபர்வீன் அன்சார் மற்றும் லுக்மான் என்பவர்களுக்கும் தொடர்பு இருப்பதும் பொதுமக்களிடம் இருந்து திரட்டிய 50 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை மோசடி செய்ததில் இதில் மூளையாக இருந்து செயல்பட்டது பாபு என்கிற சையது உஸ்மான் மற்றும் இம்ரான் பாஷா என்பவர்கள் குறிப்பிடத்தக்கது தனி படைப்பு போலீசார் அவர்களை பிடிக்க கோயம்புத்தூர் பகுதியில் மூகாம்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதில் தொடர்புடைய நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும்.  கிரிப்டோகரன்சில் அதிக லாபம் கொடுக்கிறோம் என்று நிறைய விளம்பரங்கள் தற்போது வந்து கொண்டிருக்கிறது மேலும் எம்எல்எம் முறையிலும் உங்களுக்கு முதலீடு செய்தால் மிக அதிக லாபமும் மற்றும் பல மடங்கு லாபமும் கிடைக்க செய்யும் என்ற விளம்பரம் சமூக வலைதளங்களில் பொதுவாகவே நிறைய வந்து கொண்டிருக்கிறதுஇதுபோன்று ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து சென்ற ஆண்டு மட்டும் 25 கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்கள் பணத்தை இழந்துள்ளனர் உடனடி லோன் கொடுக்கிறோம். முதலீடு செய்தால் அதிகம் அடங்கலாபம் கிரிப்டோ கரன்சியில் அதிக லாபம் என்று வருகின்ற அனைத்து விளம்பரங்களுமே இணைய வழி மோசடிக்காரர்களால் ஜோடிக்கப்பட்டது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருந்து பணத்தை இழக்க வேண்டாம் என முதுநிலை கண்காணிப்பாமல் பொதுமக்களுக்கு அறிவுறித்தியுள்ளனர். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன