இலங்கை
ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல்; பிரதி அமைச்சர் ருவான் தெரிவிப்பு

ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல்; பிரதி அமைச்சர் ருவான் தெரிவிப்பு
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தப்படும் என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கைகளும், வேட்புமனு ஏற்புத் தொடர்பான நடைமுறைகளும் ஆரம்பமாகியுள்ள பின்னணியிலேயே, ஏப்ரல் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று துறைசார் பிரதியமைச்சர் பிரதி அமைச்சர் ருவான் செனரத் கூறியுள்ளார்.
ஜூன் 2ஆம் திகதி முதல் உள்ளுராட்சிசபைகள் செயற்பட ஆரம்பிக்கும். தேர்தலை நடத்தி ஒரு மாதகால அவகாசம் தருமாறு எம்மிடம் கோரப்பட்டது. இதற்கமையவே ஜூன் 2ஆம் திகதியை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அப்படியாயின் மே மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டும். அந்தவகையில் ஏப்ரல் மாதத்துக்குள் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்’ – என்றார்.